Followers

நிலா சாப்பாடு

ஏங்க, என்னிக்கு பௌர்ணமி? கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர்.
இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா? வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்கு கேக்கறீங்க மிஸஸ் தார்?
அச்சா, இன்னும் 2 நாட்களிருக்கே. நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன் சொல்லவா? எல்லா மாசமும், சொசைட்டி மீட்டிங்க், வெறும் பேச்சு என்று உப்பு, சப்பில்லாம போயிண்டு இருக்கு. இந்ததடவை ஒரு நிலா சாப்பாடு வச்சுண்டா என்ன?
அன்று ஐயர் மாமி வீட்டில் மெம்பர்கள் அனைவரும் கூடி இருந்தார்கள். எல்லாரிடமிருந்தும் உற்சாக ஆமோதிப்புகள். ஓ.எஸ், குட் ஐடியா. எல்லாரும் ஃபேமிலியோட கலந்துக்கணும். சரி நாம 8 ஃபேமிலி இருக்கோம். ஐயர் மாமி வீட்லதான் மொட்டைமாடி வசதி இருக்கு. அங்க வச்சுக்கலாம்.
நாம எல்லாரும் வேற, வேற பாஷைக்காரங்கதான். ஆனாகூட நல்ல நட்புணர்வோட பழகிண்டு இருக்கோம். குட் ஃப்ரெண்ட்ஸாவும் இருக்கோம். இப்போ ப்ளான் போடலாமா?


இந்தியன்





          இந்தாப்பா, சர்வர், அந்தஃபேனைப்போடுப்பா. அப்பாடா என்ன வெய்யில், என்ன வெயில் ஃபேனில் இருந்து வீசிய காற்றுக்கூட அனலாக தகித்தது. ஷர்ட்டின் முதல் பாட்டனை தளர்த்திக்கொண்டு, காலரை பின்னுக்குத்தள்ளிக்கொண்டு சேரில் சௌகரியமாகச்சாய்ந்து கொண்ட அந்த நாகரீக பணக்கார மனிதர்களும், சர்வர், ஜில்லுனு என்னப்பா இருக்குஎன்றனர்.  " சார், ஐஸ்க்ரீம், ஃப்ரூட் சாலட், கஸ்டர்ட்ஃப்ரூட் ஆரஞ்ச், லெமன் பைனாப்பில் ஜூஸ்இருக்கு, என்ன சாப்பிடரீங்க" ன்னு சர்வர் சங்கர் கேட்டான். "ஓ, கே, சர்வர், முதல்ல பட்டர்ஸ்காட்ஸ் ஃப்ளேவர் ஐஸ்க்ரீம் கொண்டுவா" , என்ரார்கள். சங்கர் உள்ளே போய் அவர்கள் கேட்டதை கொண்டு தந்தான். சார் பிறகு, என்றான். இந்தாப்பா சர்வர் ஃப்ரூட்சாலட் ரெண்டு கொண்டுவா. என்றார்கள். அதையும் பவ்யமாக கொண்டு தந்தான்.


சரித்திரத்தில் சஹானா . . .

Sahana the Great

             சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவ்வுளவு சாதாரணம் இல்ல , ஏதாவது சாதனை செய்ய வேண்டும் . அப்படி ஒரு சாதனையை செய்து சத்தமில்லாமல் செய்து சரித்திரத்தில் இடம் பிடித்து இருகிறார் நம் சாதனை சஹானா .

            சஹானாவின் சாதனையை பார்பதற்கு முன்னாள் சஹானாவை பற்றி ஒரு சிறு அறிமுகம் . சஹானா tamilrockzs chat zone இன் தவிர்க்க முடியாத உறுப்பினர் . இந்த chat zone இல எல்லாருக்கு புடித்த உறுப்பினர் . சும்மா சஹானா நுழைந்தாலே சாட் களைகட்டும் .

                  எனக்கு சஹானாவை அறிமுகபடுத்திய பெருமை சந்தியாவையும் , Angel ளையுமே சாரும் . அந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு 2009 ஆம் ஆண்டு . ஒரு நாள் நான்   வழக்கம் போல் சாட் ஜோன்னில் சந்தியாவுடன்  சாட் செய்தது கொண்டு இருக்க அப்போது சாட் ஜோன் மற்றும் என்னுடையை மடிகணினி லேசாக அதிர நான் மிரட்சியோடு சந்தியாவிடம் என்ன ஆச்சு எண்டு கேட்க "அது ஒன்னும் இல்லை இது சஹானா வருவதற்கான அறிகுறி என்று சொல்ல அடுத்த சில வினாடிகளில் சஹானா அதிரடியாக சாட் ஜோன்இல் நுழைய நான் சற்று நிலை குலைந்துதான் போன்னேன் . ஆனால் ஆட்டம் அதோட நிற்கவில்லை , சஹானாவின் அதிரடி வரவின் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் சந்தியா, சஹானாவிடம் கேட்ட அந்த கேள்வி என்னை கொஞ்சம் இன்ப அதிர்ச்சியில் ஆளத்தான் செய்தது . அதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கதான்   செய்கிறது . அந்த கேள்வி " சஹானா ராஜேஷ்சை கட்டிகிறியா? " இது சந்தியா . இதை கேட்ட சஹானா கண்ணிமைக்கும்  நேரத்தில் சற்றும் தயங்காது களவாணி படத்தில் கதாநாயகி மகேஷ் (ஓவியா )  சொன்னது போல " கட்டிக்கிறேன்ன்ன் ன் ன் ன் ன் ன் . . . . "ன்னு சஹானா சொல்ல . எனக்கு ஒரு நிமிடம் இதயம் நின்று போனதை மறுக்கவோ மறக்கவோ  முடியாது. என்னுடைய கால்கள் தரையில் நிற்க மறுத்த கணங்கள் . மனசு ஆகாயத்தில் இறக்கை கட்டி பறக்க தொடங்கின . வானம் வசப்பட்டது . அதே சந்தோஷத்தில் நான் சஹானாவுடன்  எனது கன்னி சாட்டை தொடங்க , கொஞ்சம் நேரம் தான் ஆகி இருக்கும் சாட் ஜோன் இல் ஒரே புகை மண்டலம் வேறு ஒன்றும் இல்லை சந்தியாவின் stomach burning (வயித்தெரிச்சல் ) மற்றும் காதில் வந்த புகையும்தான் அதற்க்கு காரணம் . நான் சுதாரிபதற்குள் சும்மா இருக்காத நயவஞ்சக சந்தியா " சஹானா ராஜேஷ் யையே கட்டிக்க போறியா ? கட்டிக்கோ கட்டிக்கோ , ராஜேஷ்க்கு லட்டு மாதிரி ஐந்து குழந்தைகள் இருக்கு , நீ ரொம்பா குடுத்து வச்சவா" ன்னு ஒரு அணுகுண்டை போட , என் இதயத்தில் இடியை இறக்கினாள் சந்தியா .
வடை போச்சே! ! !

இதை கேட்ட சஹானா "ஐயோ அம்மாடின்னு நான் இல்லன்னு " ஒடுனதுதான் திரும்ப அந்த பக்கமே வரல .  எனக்கு வந்தது பாருங்க கோவம் , அடிப்பாவி வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல இப்படி உடைச்சிடியேன்னு அப்படியே சந்தியா மண்டைல நாலு போட்டேன் .
சந்தியா என்னிடம் அடி வாங்கியா காட்சி

அப்புறம் சந்தியாவை குமுற குமுற அடிச்சு உண்மைய சஹானா கிட்ட கக்க வைக்குரதுகுள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு .
                         அப்புறம் ஒரு வழிய சஹானாவை என்னுடைய ப்ரெண்ட்ஸ் லிஸ்ட் ல சேர்த்ததுக்கு அப்புறம் தான் சஹானாவின் சாதனை எனக்கு தெரிய ஆரம்பிச்சது . பொதுவாவே சஹானா chat zonespam பண்ண கூடிய ஆளு . spam ஐயும கூட சாதாரணமா பண்ணாம ரொம்ப கிரியேடிவ்வா பண்ண கூடிய திறமைசாலி.

spam சிறு குறிப்பு :
spam  என்பது ஒரே வார்த்தையோ அல்லது ஒரே வாக்கியதையோ பல முறை தொடர்ந்து டைப் செய்து chat இல் அல்லது மெயிலில் அனுப்புவது . ( மேலும் விவரங்களுக்கு சஹானாவை தொடர்பு கொள்ளவும் . .  தொடர்புக்கு :  spamsahana@spam.com )

அது எப்படினா, chat zone ல  எல்லாரும் இருக்கிற நேரத்துல சஹானா வந்து ஆட்டம் போட்டாலும் , சஹானாவுக்கு புடிச்ச நேரம் நைட் பேய் எல்லாம் கண்ணு முழிக்கிற நேரம் அதாவது பகல்ல இருந்து நைட் வரைக்கும் எல்லாரும் chat zone ல ஆட்டம் போட்டுட்டு ஒவ்வொருதரா போனதுக்கு அப்புறம் கடைசியா இருக்கிற ஒரு ஆளும் யாரும் இல்லையா , யாராவது வாங்கன்னு தொண்டை தண்ணி வற்ற கத்தி , அட போங்கடா யாரும் இல்லாத கடைல நான் யாருக்குடா டீ ஆத்துறது மனசு உடைஞ்சு  , நானும் போறேன்னு சொல்லிட்டு போறதை கூட சஹானா சத்தம் இல்லாம சைலேன்ட்டா பார்த்துகிட்டு இருந்துட்டு அந்த கடைசி ஆளும் போனதுக்கு அப்புறம் சஹானா தன்னுடைய கச்சேரியை தொடங்கும் . என்ன கச்சேரியா? வேற என்ன கச்சேரி? ஸ்பாம் கச்சேரி தான் . சும்மா தன்னுடைய பெயர்ல ஆரம்பிச்சு , தனக்கு புடிச்சவங்க பெயர் , chat zone பெயர்ன்னு சும்மா டிசைன் டிசைன்னா  ஸ்பாம் கச்சேரியை  தனி ஒரு ஆள களைகட்ட வைக்கும் . அட அட அதை பார்பதர்க்கு கண்கோடி வேண்டும் . இதெல்லாம் தெரியாத நான் என்னோட ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல சேர்ந்த சஹானா நான் ஆன்லைன் இல்லைனா கூட வந்து என்னோட பெயரை ராஜேஷ் ,ராஜேஷ் ,ராஜேஷ்ன்னு ஸ்பாம் பண்ணி வச்சுட்டு போய்டும் . நான் எப்போ எல்லாம் என்னோட ID ஓபன் பன்னுறேன்னோ அப்போ எல்லாம் சஹானாவோட spam  நிறைஞ்சு கிடக்கும்  . ஆஹா இந்த சஹானாவுக்குத்தான் நம்ப மேல எவ்வளவு பாசம்ன்னு எனக்கு ஒரே சந்தோசம், ஆனா நான் இல்லாத போது வந்து offline ல spam பண்ணுறது மட்டும் நிக்கல , எப்ப பாரு வந்து offlinespam பண்ணிட்டு போய்டவேண்டியது. என்னடா இது இந்த சஹானா ஆன்லைன்லையே சிக்க மாடிங்குது வரட்டும் இன்னைக்கு,  எப்படியாவது புடிச்சுடன்னு கைல வலையோட வலைத்தளத்துல காத்திருந்தேன் . மிக நீண்ட காத்திருப்புக்கு அப்புறம் ஆன்லைன் வந்த சஹானாவை காபால்ன்னு புடிச்சு , கப்புன்னு ஒரு கேள்வி கேட்டேன் . " ஏய் , சஹானா என்ன இது? நான் இல்லாத நேரத்துல வந்து இப்படி offline spam பண்ணிவசுட்டு போயிடுற? "  இது நானு .
"எனக்கு spam பண்ணுறதுன்ன ரொம்ப புடிக்கும் ராஜேஷ்" அப்படினா  சஹானா .
"என்னாது spam பண்ணுரதுன்னா ரொம்ப புடிக்குமா ?  oh my god , அப்படினா நீ என்ன மேல இருக்க பாசத்தால என்னோட பெயரை ஸ்பாம் பண்ணலையா ? " ன்னு கேட்டேன் . "இல்ல ராஜேஷ் நான் ஸ்பாம் மேல இருக்க பாசத்துலதான் ஸ்பாம் பண்ணினேன் " அப்படினா சஹானா
       என்ன கொடுமை சார் இதெல்லாம்? என்னமோ இட்லி , தோசை புடிக்கும்கிற மாதிரி ஸ்பாம் பண்ணுறது புடிக்கும்ன்னு சொல்லுது இந்த பொண்ணு .
இது கூட பரவா இல்ல அதோட நிக்காம ," எனக்கு spam பண்ண புடிக்கும் , எனக்கு spam பண்ண புடிக்கும் " ன்னு ஸ்பாம் பண்ண ஆரம்பிச்சுடுச்சு . கடுபாகிட்டேன் . ஏய் நிறுத்து நிறுத்து ன்னு சொன்னாலும் நிறுத்த மாட்டின்குது . சரி இதை விட்டுதான் புடிக்கனும்ன்னு எவ்வளவுதான் பண்ணுற பாக்கலாம்ன்னு கம்முன்னு இருந்தேன் . ஒரு வழியா ஸ்பாம் பண்ணி முடிச்சுட்டு "ஹி ஹி " ன்னு ஒரு சிரிப்பு வேற . நான் பொறுமையா கேட்டேன் " என்ன முடிச்சாச்சா? "ன்னு . அதுக்கும் " ஹி ஹி " ன்னு ஒரு சிரிப்பு .  இரு உனக்கு சரியான பாடம் கத்து குடுக்குறேன்னு , அதுக்கு அப்புறம் நான் அடிச்சேன் பாருங்க ஸ்பாம் " சஹானா ஸ்பாம் பண்ண மாட்டேன்ன்னு சொல்லு , சஹானா ஸ்பாம் பண்ண மாட்டேன்ன்னு சொல்லு " , ன்னு . சும்மா மிரண்டுடா சஹானா , நடுவ நடுவ கெஞ்சுரா , கதறா  ராஜேஷ் போதும் , போதும் ன்னு . நான் விடவே இல்லையே சும்மா 10 நிமிஷத்துக்கு ஸ்பாம் பண்ணிகிட்டே இருக்கேன் . அப்புறம் வருது புரியுது ராஜேஷ் , ப்ளீஸ் போதும் ன்னு . அப்படி வா வழிக்கு ன்னு அப்புறமா நான் நிறுத்தினேன் . அப்புறம் பொறுமையா கேட்டேன் " என்ன புரியுது? " ன்னு .
"இல்ல ராஜேஷ் எனக்கு புரியுது , சாட் பண்ணிக்கிட்டு இருக்கும் போது ஒருத்தர் இப்படி ஸ்பாம் பண்ணா அடுத்தவங்களுக்கு எவ்வளவு கடுப்பாகும் , கோவம் வரும்ன்னு இப்போ என்னகு புரியுது ராஜேஷ் " அப்படினா சஹானா .
" ஹ்ம்ம் அது , அந்த பயம் இருக்கணும் . இனிமே இங்க இல்ல எங்கயுமே நீ ஸ்பாம் பண்ண கூடாது . என்ன புரியுதா? " அப்படின்னு நான் கேட்டேன் .
"ஹம் . புரியுது " ன்னு சஹானா சொன்ன .
அப்படின்னா " இனிமே ஸ்பாம் பண்ண மாட்டேன்னு சொல்லு " அப்படின்னேன்
" சரி ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் " அப்படின்னு பவ்வியாமா சொன்னா சஹானா . ஸ்ஸ்பா.......  ஒரு வழியா நிறுத்தியாச்சுன்னு பெரு மூசுதான் விட்டு இருப்பேன் . அதுக்குள்ள பார்த்தா .
"ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் , ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் , ராஜேஷ் , இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் " ன்னு ஸ்பாம் பண்ண ஆரம்பிச்சுட்ட இந்த சஹானா .
ஸ்ஸ்பா முடியலடா சாமி , இந்த அகில சாட் உலகத்துலயே ,
"இனிமே நான் ஸ்பாம் பண்ண மாட்டேன் " ன்னு ஸ்பாம் ( spam ) பண்ணது சஹானா மட்டுமாதான் இருக்க முடியும் . இதென்னாடா உலக கொடுமையா இருக்குன்னு  அப்போ முடிவு பண்ணினேன் . இப்படி சாட் உலகில் சாதனை செய்த சஹானாவை பெருமை படுத்தியே ஆகணும் . சாதாரண சஹானாவை இனிமேல் இந்த சாட் உலகம் இனிமே ஸ்பாம் சாஹனா ( Spam Sahana )  என்றுதான் அழைக்கணும் .


" Spam Sahana the Great "


வாழ்க சஹானா ,

வளர்க  சஹானாவின் ஸ்பாம். . .

என்று அன்புடன் வாழ்த்தும் ,
ராஜேஷ் .



பின்குறிப்பு  : 1
        கூடிய விரைவில் சஹானாவின் சாதனைகள் பார்ட் -2 பதிவு வெளிவரும் . சஹானாவின் சாதனைகளை தெரிந்தவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் . அதுவும் சஹானாவின் சாதனைகள் பட்டியலில் சேர்க்கபடும் .


எச்சரிக்கை : 

      இங்க வந்து வெறுமனே பதிவ படிச்சுட்டு வயிறை புடிச்சு சிரிச்சுட்டு கமெண்ட்ஸ் போடாம போறவங்க மெயில் ID யை சஹானாவிடம் குடுக்க படும் . அப்புறம் சஹானா அப்படி கமெண்ட்ஸ் போடாம போறவங்களை மெயில் ID ல ஸ்பாம் பண்ணி கொடுமை படுத்தத்துவார்  என்று தாழ்மையுடன் எச்சரிக்க படுகிறார்கள் .  ( தக்காளி யாராவது கமெண்ட்ஸ் போடாம போங்க இருக்கு உங்களுக்கு..... )


பசுமை நிறைந்த நினைவுகளே.


             
         







நான் சென்னை சென்றிருந்த சமயம் என் அன்பு குழந்தைகள் ரேணு, ஈஸ்வர்
 விஜய் மூணு பேரும் என்னை வந்து சந்தித்தார்கள். நான் தங்கியிருந்த இடத்
 திலிருந்து அவர்கள் எல்லாருமே ரொம்ப தள்ளி இருந்தார்கள். ஆனாலும்
 என்னைப்பார்க்க வந்தார்கள். மிகவும் சந்தோஷமான நெகிழ்ச்சியான சந்திப்
பாக அமைந்தது. நான் தாம்பரத்தில் ஒரு தூரத்து சொந்தக்காரா வீட்டில் தங்கி
 இருந்தேன், அவர்களு ம் இவர்களை அன்புடன் வரவேற்றார்கள்.யூரேஷும்
 வரதா இருந்தான். உடம்பு சரி இல்லாமப்போச்சு.


                                 





ஒருவரை ஒருவர் முதல் முறையாகப்பார்ப்பதால் ஆனந்த்தக்கண்ணீர்தான்
 முதலில் வந்தது. கட்டிப்பிடித்து அன்பான வரவேற்புக் கொடுத்தேன். அப்போ
 நாங்க என்ன பேசினோம் என்ன செய்தோம்னே இப்ப நினைவுக்கு வரலே.
 ஏதோ சொப்பன உலகத்துக்கு போயிட்டு வந்தது போல இருக்கு. ஒன்னரை
 மணி நேரம் தான் இருந்தாங்க.னல்லா பேசி சிரித்து சந்தோஷத்தைக்கொண்டாடினோம். இதுவரை எழுத்துமூலமாகத்தானே
 ஒவ்வொருவரும் பழக்கம். இப்ப நேரில் பார்த்ததும்கூட கனவு போலவே
 இருந்தது.
                   

               










அந்த  வீட்டு மனிதர்களும் இவர்கள்க்கு நல்லா டிபன் காப்பி கொடுத்து, அவங்க
 வீட்டையெல்லாம் சுத்தி காட்டி நல்லா பழகி பேசிக்கொண்டிருந்தாங்க.
 அங்க 80+, 70+, 60+, 50+ 40+ வயதுகளில் பெண்மணிகள் இருந்தாங்க. எல்லாருமே செமை ஜாலியா அரட்டையில் கலந்துகிட்டாங்க.அவங்க வீடு
 பழங்கால வீடு பின்பக்கம் கிணறு, தோட்டம்,5,6, ரூம் கள் கொண்ட விச்தாரமான வீடு பூஜாரூம் வரையிலும் எல்லாரையும் சுத்திக்காட்டினாங்க.
 எல்லாருக்குமே சந்தோஷமான இனிமையான சந்திப்பாக அமைந்தது.இதுக்கெல்லாம் மூலகாரணம் நம்ம ராஜேஷுக்கு தான் நன்றி
 சொல்லனும்.


                                   




 எங்கெல்லாமோ இருப்பவர்களை இந்த சாட் ரும் வழியா பேச, பழக வைக்க வாய்ப்புக்கொடுத்திருப்பது ராஜேஷ்தானே. ராஜேஷ் நீ எங்கே இருக்கேன்னோ, உன்னை எப்படி காண்டாக்ட் பன்னனுனோ தெரியவே இல்லே. நீயும் அமைதி
 யா இருக்கே. யேன்னு தெரியலே. நன்றி, நன்றி.
                                           

                             

பெண் நட்பு . . .




எதிர் பார்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் - உன்
நட்பையும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கும் - இந்த
பைத்தியகாரி தோழியை மறந்துவிடாதே !

முதல் ஸ்பரிசம், காதல் .......
மழைத்துளி, கவிதை.....!
என
மோகமான உணர்வை விட

அன்பு, பாசம்.......
நட்பு, பிரிவு.....!
பரிமாற்றம் என்னும் அடைமொழிகளோடு
உன் மனம் கவர விரும்புகிறேன்
காலம் கடந்து நிற்கும்
பெண் நட்பாய்!



நட்ப்புடன் ,
ரேணு .


என் காதலி





என் காதலி
சிட்டு குருவி போல சின்ன சின்னதாய் நித்தமும்
பொக்கிஷமாய் உன் நினைவுகள்
தினம் தினம் நொடிக்கு நொடி சேர்த்து வைக்கிறேன்
வார்த்தைகள் தீர்ந்து போனாலும் உன் மௌனங்கள்
கவிதை ஆகின்றன
என் காயங்கள் ஆறினாலும் உன் காலடி தடம்
காத்து நிற்கின்றேன்
நீ வருவாய் என....

கள்ளி செடி
விழிகளில் உன் பிம்பம் மூடி
இதயத்தில் விதைத்தேன்
அது காதலை வளர்ந்தது
மழைக்கு பதிலாய் என்
கண்ணீரை வர்ர்தேன்
கள்ளி செடி என வெட்டினால்
என் காதலி
மறக்க முயல்கிறேன்
சிறகுகள் இழந்தும் பறக்க துடிக்கும் பறவை போல
உன்னை மறக்க முயல்கிறேன்
அதற்காக உன்னை எப்பொழுதும் நினைக்கிறேன்

அன்புடன்
ஈஸ்வர்

கருத்து சொல்ல போறேன் காதை(கண்ணை) திறங்க




ஹாய் friends, எவ்ளோ நாள் தான் நானும் கவிதையும், கதையும் சொல்றது. அதான் நான் இப்போ கருத்து சொல்லாலாம் னு வந்து இருக்கேன். ( நாங்களும் கருத்து சொல்லுவோம் ல ). நம்ம பாக்கியராஜ் மாதிரி ஒரு குட்டி கதையோட கருத்து சொல்றேன். ஒவ்வொரு குடி மகனுக்கும் தேவையான கருத்து.நம்ம கதையோட hero கு அடுத்த நாள் எக்ஸாம் ங்க, ஆனா நம்ம ஆள் கு சரியா படிக்காத நாலா நம்பிக்கை இல்ல. so night புல்லா சரக்கு அடிச்சுட்டு தூங்கிட்டாரு.

காலைல எக்ஸாம், அது ஒரு objective typeங்க. அதாவது சரியான விடையை tick பண்ணனும். நம்ம ஆள் கிளம்பி போய்ட்டு இருந்தாரு, அப்போ போற வழி ல ஒரு பேனா கிடந்துச்சு. golden color ல பள பள னு மின்னிட்டு இருந்துச்சு. நம்ம ஆள் அந்த பேனா வ எடுத்துட்டு எக்ஸாம் கு போய்ட்டாரு. question paper அ பார்த்தா எல்லாம் கேள்விக்கும் answer தெரிஞ்சதா இருக்கு நம்ம ஆள்க்கு. நாம ஆள் ஜாலியா எழுத ஆரம்பிச்சுட்டாரு. எழுதிகிட்டு இருக்கும் போது கை தவறி answer பேப்பர் ல வேற எங்கயோ tick பண்ணிட்டாரு ஆனா என்ன அதிசயம் அது கரெக்ட் ஆன answer ல போய் டிக் ஆச்சு. நம்ம ஆள்க்கு ஆச்சர்யம் தாங்க முடியல, பேனா வ பார்த்த பள பள னு மின்னுச்சு. சரி இன்னொரு தடவ பாக்கலாம் னு வேற எங்கயோ tick பண்ணா அதும் சரியான விடை ல போய் டிக் ஆச்சு. ஹோ! இது அதிசய பேனா போல னு நம்ம ஆளு கண்ண மூடிக்கிட்டு tick பண்ண ஆரம்பிச்சாரு.

எல்லாம் அதுவா போய் கரெக்ட் ஆன விடை ல tick ஆச்சு. நாம ஆள் சந்தோசம் தாங்க முடியல அதுனால இன்னைக்கும் சரக்கு அடிச்சுட்டு தூங்கிட்டாரு. மறுநாள் பார்த்தா அந்த golden pen சாதாரண பேனா வா இருந்துச்சு. நம்ம ஆளும் கண்டுக்காம போய்ட்டாரு.

அடுத்த வாரம் result வந்துச்சுங்க , நாம ஆள் ஜீரோ மார்க் வாங்கி இருந்தாருங்க. so இதுனால என்ன கருத்து சொல்ல வரேன்னா அறிவ நம்பாம அதிர்ஷ்டத்த நம்பினா இப்டிதான் ஆகும் னு, wait wait இப்படி நான் சொன்னா கிழி கிழி னு கிழிச்சுட மாட்டீங்க. ஆன நான் என்ன கருத்து சொல்ல வரேன்னா night இப்படி
கண்ட சரக்கு அடிச்சா இப்படி தான் கண்ண கட்டும், சாதா பேனா gold pena வா தெரியும், answer லாம் கரெக்ட் ஆ இருக்கும். அதுனால சரக்கு அடிக்காம எக்ஸாம் கு போங்க ஓகே ..........

LIFE IS A CHALLENGE.



LIFE  IS  A  CHALLENGE  -------- MEET  IT.

LIFE  IS  A  STRUGGLE     -------- ACCEPT  IT.

LIFE  IS  A  ADVENTURE  -------- DARE  IT. 

LIFE  IS  A  SORROW         --------OVER  COME  IT.

LIFE  IS  A  TRAGEDY       -------- FACE  IT.

LIFE  IS  A  DUTY                -------- PERFORM  IT.

LIFE  IS  A  GAME               -------- PLAY  IT.

LIFE  IS  A  MYSTERY        -------- UN FOLD  IT.

LIFE  IS  A  SONG                -------- SING  IT.

LIFE  IS  A  BLISS                -------- TAKE  IT.

LIFE  IS  A  OPPORTUNITY-------- UTILIZE  IT.

LIFE  IS  A  DREAM             -------- REALIZE IT.

LIFE  IS  A  JOURNEY         -------- COMPLETE  IT.

LIFE  IS  A  PROMISE         -------- FULFILL  IT.

LIFE  IS  A  LOVE                 -------- ENJOY  IT.

LIFE  IS  A  BEAUTY            -------- PRAISE  IT.


அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி

சைக்கோ

சைக்கோ


என்கல்யாணம் ஆகி பூனா வரும்போது என் அத்தைபையனையும்
கூட்டி வந்தேன். S. S. C.முடிச்சுட்டு வீட்ல சும்மதான் இருந்தான்.
அப்ப அவனுக்கு 15 வயசு இருக்கும். அத்தை அவனுக்கு பூனாவில்
ஏதாச்சும் வேலை வாங்கி கொடுக்கச்சொன்னா. அப்பலாம்11- தான்
S. S. C. படிச்சிருக்கானே தவிர இங்க்லீஷ்ல பேச,எழுத படிக்க
ரொம்பவே யோசிப்பான்.கிராமத்தில்படித்தால் இப்படித்தான் ஆகும்.
அதிலயும் அவன் ரொம்பவே கூச்ச சுபாவி, வெகுளி.

**The Broken Heart **

"The Broken Heart" 



This is more than just about pure gratitude.
I hope u guys can see beyond that, if u can then you're great!
This is more than just emotions, if u realize that you're awesome.


So here is it..
When we give all we have and all we can, we expect a certain level of gratitude,call it kindness. Fair enough?
Well at least from where i come from, everyone deserves it. They do.

But what happens when we keep giving and realize some day its only for the benefit of others and never ourselves?

What happens when we wake up one day to realize we've done everything we could and we're at the wits end?
What happens when we really and unimaginably want some love in return.
What happens when we feel we never will and have never gotten it.
What happens when we feel we really do deserve it.
What happens when we realize we've been too nice.
What happens when we feel they don't really deserve it.
What happens when we feel we've been treated like a doll, a very happy looking doll
A happy front always, no possible sadness anywhere around the corner even.
What happens when we realize we've been that doll, that's not supposed to get upset at all.
A doll that's only meant for the happiness it gives?
My whole point is,never take the happiness and easiness of one for granted
I might be the happiest and at my best but that's not what u always can see
There's something beyond that
Someone who rightfully deserves as much love and care that they give.
& i wish you could see that.
Well, when one day I realize u're not worth my tears i might quit.
Then its too late.

You'll miss the greatest girl on the phase of planet (Me Of-course ;) You'll miss that one girl that knows u the best
That one girl who will make u happy
That one girl who will keep u happy for the rest of ur life
That one girl who can never see u hurt
That one girl who has just so much more to give every other day.
U will miss all of these.
And best of all you will miss ME.

Just remember if someone could laugh about ur pain
Laugh at ur tears
Then obviously they weren't ur frends to begin with.

With Broken Heart , 
 Me (Girl) 

Written By a Girl , 

Posted By ,
Rockzsrajesh

தாயுமானவள் . . .


காதலியாய் தான் இருந்து, கட்டியவளாய் மாறி வந்து,
வாய்க்காமல் போன வாழ்வதின் அர்த்தத்தை
புத்தியில் விளங்கிடவும் செய்தாள்!
விளையாட்டு பெண்ணும் அவள் அல்ல
விலையேரபெற்ற மரகதமும் தான் என்பேன்!

பட்டினியாய் தாம் இருந்தும், பிடிப்பின்றி நான் இருந்தும்
வெட்டியாய் எண்ணவில்லை, வெறும் பயலாய் மிதிக்கவில்லை
மாறாய் மனதோடு வழக்காடி, மதியயும் ஊட்டினாள்
புற அழகும் அவள் அல்ல
புன்னகையின் தேவதையும் தான் என்பேன்!

செல்லா காசாய் நான் இருந்தும், புறம் தள்ளாது தான் இருந்து
சான்றோரின் மத்தியில் சரிக்கு சரியாய் எனை நிறுத்தி
புத்திசாலியாம் இவன் என்று புகழாரம் சூட்ட வைத்தாள்
பெண் மட்டும் அவள் அல்ல
பெண்ணினத்தின் பெருமையும் தான் என்பேன்

யாரும் இல்லாது நான் இருந்தும், உன்னவளாம்
நான் என்று முன்னின்று தான் வந்து
வாழ்வதனில் முன்னிலையில் கொண்டு சேர்த்தாள்
தாரம் மட்டும் அவள் அல்ல
தாயும் ஆனவள் தான் என்பேன்!

அன்புடன் ,

டேவிட் . . .

எது வெற்றி?






உலகம் திறமையைப்பார்த்து மதிப்பிடுவதில்லை. வெற்றியைத்தான் போற்றுகிறது.உள்ளுக்குள்ளே திறமைகளைப்போட்டுப்பூட்டி வைத்துக்கொண்டால் யாரும் வந்துநம்மைத்தட்டிக்கொடுத்து,சபாஷ் போட மாட்டார்கள். நாம் எடுத்துக்கொண்ட துறையில் போய்,அந்தத்துறையிலே வெற்றி எது என்பதைக்கண்டு அந்த வெற்றியைசாதித்துக்காட்டினால், புகழும், பணமும், பெயரும் பெருவது எளிது.

நொறுக்ஸ்


நொறுக்ஸ்.



முதல் மொக்கை 1

என் பெண் வயிற்றுப்பேரனும், பெண்ணும் அம்பர்னாத்ல என்னப்பாக்க
வந்தாங்க.எல்லாரும் பம்பாயில் வேர, வேர இடத்ல இருக்கோம்.
அப்போ பேரனுக்கு2 வயசு இருக்கும். விளையாட்டு பேச்சு சிரிப்பு
எல்லாம் முடிந்து பால்கனி ஜன்னல்ல அவனைஉக்கார வச்சு பருப்பு
சாதம் ஊட்டிண்டு இருந்தேன். ஃப்ளாட்சிஸ்டம்தான். நாங்க மூணாவ்து
மாடி. வெளில வேடிக்கை பாத்துண்டே சாப்பிட்டு இருhந்தான் பேரன்.
காம்பவுண்ட் சுவருக்கு அந்தப்புரம் ஒரு குப்பம், சேரி இருக்கும். அங்கு
விளையாடும் குழந்தை களைப்பாத்துண்டே இருந்த்வன் சடன்னா அம்மா
இங்க ஓடிவா, ஓடிவான்னு கத்தவும், பயந்துபோன என் பொண்ணு உள்ளேந்து
வேகமா ஓடிவந்தா. என்னடா,என்னாச்சு இப்படி கத்தராய்?என்றா.
அம்மா அங்க பாரேன் 4 எலிபண்ட்.2 வெள்ளை, 2 கருப்பு எலிபண்ட் இருக்கு
பாரு, பாட்டி பாருன்னு சொல்லவும், இங்க ஏதுடா யானை என்று நானும்
என்பெண்ணும் எட்டிப்பாத்தா,எங்களுக்கு அடக்கமாட்டாம சிரிப்பு பொத்துகிட்டு

பெயர் குழ்ப்பம்

ஒரு 15- வருடங்கள் முன்பு லேண்ட் லைன் போன் கனெக்‌ஷன்

புதிதாக கிடைத்த சமயம். 2, 3 பேருக்கு ஒரே நம்பர் கொடுத்திருப்பா

போல இருக்கு. ஒரு நாள் காலை 9 மணிக்கு ஒரு போன்கால் வந்தது.

”லஷ்மி பாட்டி ஹை?” என்று ஒருகுரல் எதிர் சைடிலிருந்து.(ஹிந்தியில்)

நானும் எஸ் நான் லஷ்மி பாட்டிதான் பேசரேன். நீங்க யாரு பேசரீங்க?

எனக்கு ஒருடௌட் எனக்கு 4 பேரப்பசங்க உண்டு. யாருமே என்னை

லஷ்மி பாட்டின்னு சொல்லமாட்டாங்க. அம்மம்மா, தாத்தி,அம்பர்னாத் அம்மா

என்று வித,விதமா கூப்பிடுவாங்களே தவிர லஷ்மி பாட்டின்னு சொல்லவே

மாட்டாங்க. எதிர் சைட் ஆளு மேடம் இது ஔரத்ஆவாஜ்( இது பொம்பிளைக்குரலா

இருக்கு.) எங்க லஷ்மிபாட்டி பெரியகம்பெனியோட மேனேஜிங்க் டைரக்டர்.

நான் கம்பெனி மேனேஜர் பேசரேன். ப்ளீஸ் அவரைக்கூப்பிடுங்க. ரொம்ப அவசரமா

அவர்கிட்ட ஒரு விஷயம் பத்தி பேசணும். ரொம்பவும் அர்ஜண்ட். என்றார்.

எனக்கு திரும்பவும் மண்டைக்குடைச்சல். கண்டிப்பா இது நமக்கு வந்த கால் இல்லை

சார் ப்ளீஸ் என்ன பேருசொன்னீங்க? ந்னு திரும்பவும் கெட்டேன்.

என்னம்மா உங்க கூட பெரிய தொந்தரவாபோச்சு. எங்க சார் பேரு

“லஷ்மண் பாட்டீல்” உடனே அவரைக்கூப்பிடுங்க மேடம் என்றார் அழாக்குரையாக.

எனக்குப்புரிஞ்சுபோச்சு. இது ஏதோ ராங்க் நம்பர் என்று. அசடுவழிய சாரிசார்

ராங்க் நம்பர்னுசொல்லி போனைக்கட் பன்ணிட்டேன்.

இந்தசம்பவம் நினைச்சு சிரிக்காத நாளே கிடையாது. என் பேரப்பிள்ளைகள்

எல்லாரும் . என்ன லஷ்மி பாட்டீல் சௌக்கியம்மானு இன்னும் கல்லாய்க்கிராங்க.

இதுமட்டுமில்லை போன் வந்த புதுசுல, மௌத்பீசை காதிலும்,காதில்வைத்துக்கொள்

வதை வாய்ப்பக்கமும் வச்சுண்டு கூட காமெடி பீசாகி இருக்கேன்.

ப்ளாக்ல சீரியஸ்மேட்டர்தான் எழ்தனுமா என்ன? அப்பப்ப இப்படி சில காமெடி பீஸ்

                                 எழ்தி நம்மை ரிலாக்ஸ் பண்ணிக்கலேமே? என்ன சொல்ரீங்க

அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி

எதிர்பாராத காதல் . . . ( பகுதி- 2 ) :)


நாள் 1 :

பூஜா: சஞ்சய்  விண்ணை தாண்டி வருவாயா படம் நல்லா இருக்குன்னு   சொன்னாங்க நம்ம போலாமா ???

சஞ்சய் : ஆமா ப்ரிண்ட்ஸ்சும் அப்படிதான் சொன்னாங்க . இன்னைக்கே போலாமே . . 

தியேட்டர்ரை  விட்டு வெளியே வரும் போது

பூஜா : படம் ரொம்ப நல்லா இருந்தது!! இப்படி ஒரு காதலன யாரு மிஸ் பண்ணுவா சொல்லு .....??

சஞ்சய் : இப்படி ஒரு லவ் படத்துல மட்டும் தான் வரும் ... நிஜத்துல அதெல்லாம் ஒன்னும் நடக்காது ...

(அவள் மனதுக்குள் : நீ எப்போ இந்த மாதிரி ஒரு காதலன் ஆக போற டா???.... )

நாள் 4 :

சஞ்சய்  : எங்க நம்ம friends யாரையும் காணோம்?

பூஜா: அவங்க எங்க போறாங்க என்ன பண்றாங்க .. ஒன்னும் தெரியல..

சஞ்சய்  : சரி அப்போ நாம என்ன பண்ணலாம் இன்னைக்கு ?

பூஜா:  டே நாம வேணா "horror house" க்கு போலாமா ?

சஞ்சய்  : ஹ்ம்ம் ஓகே

அவளுக்கு பயமாக இருந்தது .. அவன் கைகளை பிடித்துகொள்ள நினைத்தாள் ஆனால் வேறு ஒருவர் கையை அவள் மாற்றி பிடிக்க இருவரும் சிரித்து கொண்டனர் .

இப்படி சின்ன சின்ன நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் நடந்தது.. அவள் அவனை இன்னும் அதிகமாக நேசிக்க ஆரம்பித்தாள் .. அவன் இல்லாத ஒரு வாழ்கை அவளுக்கு வேண்டாம்  என்று நினைத்தாள் .
 

நாள் 12 : 

 அவர்கள் கடற்கரை மணலில் நேரத்தை கழித்தனர் .

நாள் 15 : 

 அன்று அவர்கள் சாலையில் குறி கூறும் ஒரு பெண்ணை பார்த்தனர்... அவரவர் எதிர் காலத்தை பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்டனர்.

அவனுக்கு அந்த பெண் "உன்னை அன்பு செய்ய .. உன் வாழ் நாள் முழுவதும் உனக்காக வாழ ஒரு பெண் வர போகிறாள்" என்று கூறினாள்.

அவளுக்கு அந்த பெண் "உன் வாழ்கை முற்றிலும் மாறுபட்டதாக அமைய போகிறது.. அது விரைவில் நடக்கும்" என்று கூறினாள்.

இருவரும் குழப்பத்துடன் அங்கிருந்து சென்றனர் .

நாள் 20 :

அன்று அவள் வீட்டிற்கு நண்பர்களை அழைத்திருந்தாள்.
இரவில் மொட்டை மாடியில் அனைவரும் பேசி கொண்டு இருந்தனர். அப்பொழுது அவள் அரவிந்தை கூபிட்டாள்.

பூஜா: சஞ்சய்  அங்க பாரு... 

சஞ்சய்  : அது shooting star  தானே!!!!!

பூஜா : ஹே ஆமா ... உன் விருப்பத்தை சொல்லு .. அது கண்டிப்பா ஒரு நாள் நடக்கும்..

சஞ்சய்  : சரி .. என்னை  வாழ்க்கை பூரா சந்தோசமா பார்த்துக்க  போற பொண்ண சீக்கிரம் காட்டு.

(அவள் மனதுக்குள் : நான் தான் டா அது .. இன்னுமா உனக்கு புரியல?? :( )

சஞ்சய்  : சரி இப்போ நீ உன் விருபத்த சொல்லு ..
அவள் அமைதியாக வேண்டிக்கொள்ள .. அவன் காதில் எதுவும் விழ வில்லை ..

நாள் 29:

அவள் எதிர்பார்த்த நாள் நெருங்கி விட்டது. அவர்கள் நாளை அதே பார்க்கில் சந்தித்து கொள்ள முடிவு செய்தனர் .

நாள் 30:

11:37

அவர்கள் வாழ்கை விளையாட்டை அரம்பித்த அதே இடத்தில் அமர்ந்தனர்.

சஞ்சய் : நான் போய் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரேன்.

பூஜா: சரி.. அப்படியே எனக்கு ஒரு டைரி மில்க் வாங்கிட்டு வா.

11:55

ஒரு ஆள் அவளை நோக்கி ஓடி வந்து...

அந்த தம்பி உன் கூட தான் வந்ததா மா?? ……….    என்று கேட்டார்.

பூஜா : ஆமா ஏன்?  என்ன ஆச்சு??

ஒரு லாரி காரென் குடிச்சுட்டு  அந்த தம்பி மேல வண்டிய ஏத்திட்டு  போய்ட்டான் மா...!! ஹாஸ்பிடல்க்கு கொண்டு போறாங்க மா . .

அவள் அதிர்ச்சி தாங்க முடியாமல் அழுதுகொண்டே மருத்துவமனைக்கு ஓடினாள்.

தொடரும்……………………………


அன்புடன்
maggi 


பிரம்மனின் படைப்பில்.

பிரம்மா ஓ பிரும்மா.

மும்மூர்த்திகளில் நம்மையெல்லாம் படைக்கும் கடவுள் பிரும்மா
என்று நாமெல்லாம் கேள்விபட்டிருக்கோம். இல்லியா?

டிஸ்கி:- இதுவரை அப்படி கேள்வியே படலைன்னாகூட இப்பவாவது
தெரிஞ்சுக்கோங்க. பெரியவங்க சொல்ராங்க.


கீப் கொயட், டிஸ். ஓ, கே, ஓ ,கே.

அவங்க படைப்புத்தொழிலில் ஈடு பட்டிருக்கும் போது சரஸ்வதி தேவிக்கு
கேக் பண்ணனும்னு ரொம்ப ஆசையா இருந்ததாம்.

டிஸ்கி:- ஐயோ, சாமிக்கெல்லாம் கேக் பண்ண ஆசை வரலாமா?.
நீ வாயை மூடிண்டு ஒரு ஓரமா நிக்கிரியா?

மிஸ்டர் எகஸ் - 2

                       பாட்டு பாடணும்.

     மிஸ்டர் எக்ஸுக்கு மனைவியும்,   இரண்டு வயதில் ஒரு குட்டி பையனும்
     இருந்தார்கள்.ஒரு சமயம் பக்கத்து வீட்டு குழந்தைக்கு ஒன்றாம் வயது
     பிறந்த நாள் விழாவுக்கு இவர்களையும் அழைத்திருந்தார்கள். 6  மணிக்கு
     மூவரும் கிளம்பி  போனார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் இருந்து நிறைய
     குழந்தைகள் பெற்றோருடன் வந்திருந்தார்கள். குழந்தைகள் கலர் தொப்பி
     கலர் கண்ணாடி மாஸ்க் எல்லாம் போட்டுன்ண்டு ஒரே ஆட்டம் பாட்டம்
     கொண்டாட்டத்தில் இருந்தார்கள். 7- மணிக்கு கேக் வெட்டி ஹேப்பி பர்த்
     டே பாடி கேக் ,ஸ்னாக்ஸ் ஜூஸ் எல்லாம் சாப்பிட்டார்கள்.குழந்தைகள்
     ஓடிப்பிடித்து விளையாடியும், பெரியவர்கள் ஹாலில் வட்டமாக உக்காந்து
     அரட்டையிலும் மும்முரமாக இருந்தார்கள். அப்போதுபார்த்து  ஜூனியர்- எக்ஸ்
     மம்மி எனக்கு மூச்சா வரதுன்னு சத்தமாகச்சொன்னான். எல்லா குழந்தைகளும்
     கைகளால் வாயைப்பொத்திக்கொண்டு கேலி செய்வதுபோல சிரித்தார்கள்.

    மிஸஸ் எக்ஸ் குழந்தையை பாத்ரூம் கூட்டிப்போனாள். இங்க பாரு பேட்டா
    இதுபோல சமயத்தில் மூச்சா வரதுன்னு சொல்லக்கூடாது எல்லாரும் எப்படி
    கேலியா சிரிச்சா பாத்தியா. இனிமேல மூச்சா வரும்போதெல்லாம் மம்மி
    எனக்கு பாட்டு பாடனும்னு சொல்லனும். நான் புரிஞ்சுண்டு உன்னை பாத்ரூம்
    கூட்டிப்போவேன் சரியா என்று  சொன்னாள். ஓ, கே, மம்மி இனிமேல பாட்டு
    பாடணும்னு சொல்ரேன் சரியா என்று சமத்தாகச் சொன்னான். பார்ட்டி முடிந்து
    வீடு போனார்கள். அதுமுதல் பையன் அம்மாவிடம் பாட்டு பாடணும்னு சொல்ல
    பழகினான். மிஸஸ் எக்ஸுக்கு ரொம்ப சந்தோஷம். குழந்தை சொன்ன உடனே
    புரிஞ்சுண்டானே என்று.

    10-தினங்கள் கழிந்தபிறகு மிஸஸ் எக்ஸுக்குபக்கத்து ஊரில் இருக்கும் அவளின்
   பெற்றோரை பார்க்கப்போக வேண்டி இருந்தது. மிஸ்டர் எக்ஸுக்கு லீவு கிடைக்கலை.
   குழந்தையும் கிராமத்துக்கு வரமாட்டேன்னு சொன்னான். சரின்னு மிஸஸ் எக்ஸ் மட்டும்
   முத நாள் இரவு 7-மணிக்கு கிளம்பி போய் மறு நாள் காலை 8-மணிக்கு திரும்ப வருவதாகச்சொல்லி  பையனிடம் மம்மி ஊருக்குபோய்ட்டு வரேன் டாடியை படுத்தாம சமத்தா
   இருக்கனும் என்று சொல்லிட்டு, மிஸ்டர் எக்ஸிடமும் குழந்தையை ஜாக்கிரதையா பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு போனா. குழந்தையும் ஜாஸ்தி தொந்திரவு கொடுக்காம டி.வி யில்
   கார்ட்டூன், போகோ எல்லாம் பாத்துட்டு சமத்தா அப்பாவும் பில்ளையும் சாப்பிட்டபிறகு 10-
   மணிக்கு படுக்கப்போனார்கள்.

   அப்பா ஸ்டோரி சொல்லுன்னான் குழந்தை. என்ன ஸ்டோரி வேணும்னுகேட்டார் அப்பா.
   அதான் பா, குருவி பாயசம் சாப்பிட்ட கதை, காக்கா தண்ணிகுடிச்ச கதை,முயல் ஆமை
   கதை இதெல்லாம் சொல்லு என்ரான். அப்பாவும் அலுக்காம ஒருமணி நேரம் கதை சொன்னார்.
   11-மணி ஆகியும் குழந்தை தூங்காம கதை கேட்டான். மிஸ்டர் எக்ஸ் சரிபேட்டா நேரம் ஆச்சு.
  இப்ப நாம தூங்கலாமான்னார். பையன் உடனே அப்பா எனக்கு பாட்டுப்பாடணும்னு சொன்னான்.
   அம்மா, பிள்ளையின் கோட் வேர்ட் அவருக்குத்தெரியாது. என்னது மணி 11 ஆகுது இப்பல்லாம்
   பாட்டு பாடக்கூடாது அக்கம் பக்கத்ல எல்லாரும் எழுந்துடுவா. நாளைக்காலேல பாட்டு பாடுவியாம்
   சரியா இப்போ சமத்தா படுத்து தூங்குவியாம் என்று சொன்னார். பையனா கேப்பான் இல்லைப்பா
   எனக்கு இப்பவே அவசரமா பாட்டு பாடியே ஆகனும்னு அடம்பிடிக்கவும் எக்ஸ்  என்ன பண்ணனு
  கொஞ்ச நேரம் முழிச்சுட்டு, சரி மெதுவா என்காதுல மட்டும் பாடுன்னார் பையனோ திகைத்துப்போய்
   என்னது உன் காதுலயா என்ரான் ஆமாடா சீக்கிரமா பாடு வா. எனக்கு தூக்கமாவருது என்ரார்.
  குழந்தையும் சமத்தா அப்பாகாதுல பாட்டு பாடினான்.

  ( சும்மா ஒரு ஜாலிக்கு. ஜஸ்ட் ஃபார் ஃபன்) இதெல்லாம் வெரும் சாதா தான். 




 இன்னொரு சமயமும் மிஸ்டர் எக்ஸும்  அவர் பையனு்ம் இரவு தனியாக இருக்க வேண்டி வந்தது. வழக்கம்போல டி. வி. பார்த்து சாப்பிட்டு கதை சொல்லி, எல்லாம் முடிந்து  11- மணி  ஆனதும் மகனிடம் தூங்குப்பா என்றார். அந்த வாண்டு அம்மா கொடுப்பதைக்கொடு, ஆனாதான் தூங்குவேன்
 என்ரான்.அம்மா என்ன கொடுப்பாங்க? நீ தான்
 இவ்வளவு பெரிய அப்பாவா இருக்கியே உனக்குத்தெரியாதா? சீக்கிரம் கொடு என்ரது.
எனக்குத்தெரியலை நீயே சொல்லு என்ரார்.
 அந்த வாண்டு சொல்லாமல் அடம் பிடிக்கவும் எக்ஸுக்கு கோவம்வந்து பையன்
 முதுகில் ஓங்கி நாலு அடி வைத்தார். அப்ப
அந்த வாண்டு இதைத்தான் அம்மா டெய்லி
 கொடுப்பாங்க அப்பதான் எனக்கு தூக்கமே வரும்னுசொல்லி  திரும்ப படுத்துண்டு தூங்கினான். மிஸ்டர்எக்ஸோ தலையில் கை வச்சுண்டூ கட்டில் ஓரமாக உக்காந்தார்.


அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி


நந்தவனம்


என் அழகிய ரோஜா
கை நழுவி நிலத்தில் விழவில்லை
நெருப்பில் விழுந்து விட்டது
எங்கு இருந்து வந்ததோ தெரியவில்லை- சுறாவளி
என் சுகந்தமான தென்றலை இழுத்து சென்றது...

அன்று இன்பம் வீட்டினில் தவழ்ததால் துன்பம் இல்லை...
இன்று துன்பம் வீட்டில் குடி அமர்ந்ததால் இன்பத்தை நெருங்க முடியவில்லை...

அன்று என் கண் எதிரே உலவிய தெய்வம்
இன்று நிழலாய் போனதேன்?
கனவுகள் மட்டுமே என் வாழ்க்கையா?

வாழ்க்கை எனும் சுவட்டில் காலம் ஒரு தொடர் கதை
பாதி எழுதுவதற்குள் கதையின் கரு தொலைந்து விட்டது

உயிர் கொடுத்து அன்பை சமைத்து ஊட்டியவளே
நான் அம்மா சொன்ன போது என் உச்சி முகர்ந்தவளே
உன் விரல் பிடித்து நடந்த போது தேர் வடம் பிடித்த பெருமை எனக்கு
இன்று தெய்வம் இல்லா கோவில் ஆனேன்

மலரினும் மெல்லிய உன்னை தீ தான் தழுவியதோ?
அன்று நிலா காட்டி எனக்கு சோறு ஊட்டினாய்
என் பசி திரும் முன் நீ எங்கே சென்றாய்
நான் கேக்கிறேன் நிலவே என் தாய் எங்கே?
என் வாழ்வில் என்றும் அமாவாசை தானோ

என்ன தான் செய்தாலும்
இதயம் ஆற மறுக்கிறது

வாழ்கையின் கண்ணா மூச்சி விளையாட்டு இறப்பு தானே
மரண தூதன் வந்து அழைத்து விட்டான் நீயும் சென்று விட்டாய்.

அல்லல் படுகிறேன் நான் இங்கு தனியாக அம்மா
யாரிடம் ஓடுவேன் கடவுளிடம் ஒடுவேனா,
இல்லை கதறி தான் அழுவேனா என்ன செய்ய முடியும்.
உன் கருவறை மட்டும் உலகம் என கொண்டவளே இங்கு
தனியாக விட்டு எங்கே சென்றாய்.
நாட்கள் ஓடி விட்டன இப்பொழுதும் உதடுகள் கேட்கின்றன
எங்கே என் அம்மா என்று...??????

சூல் கொண்ட உன் கருவில் நான் மீண்டும் பிறப்பது எப்போது?
என் வசந்தம் திருமபுமா?
உன் கல்லறை சுமக்கும் பூக்கள் எல்லாம் எந்தன் இதய வலியே
உன் தோட்டத்தில் நான் மலர்வது எப்போது அம்மா


வலியுடன் , 

ஜெஸ்சி . . 

 

தேவ் லாலி

 கெட் டுகெதர்.


நாசிக் கிட்ட இருக்கும் தேவ்லாலி என்கிர சின்ன ஊரில் ஒரு கெட் டுகெதருக்கு போய் வந்தேன்.ரொம்பவே சின்ன ஊருதான். கண்டோன்மெண்ட் ஏரியா. பூரா, பூரா மிலிடரி ஆட்கள்தான் இருக்காங்க. கட்டுப்பாடான ஊரு. சுத்தமான ஊரும் கூட,எல்லா பாஷைக்காரங்களும் ஆர்மில இருப்பாங்கதானே. 15-ம் தேதி சாயங்காலம் கிளம்பி இரவு போயிச்சேர்ந்தோம்.பெரியவங்களும் சின்
நவங்களுமா ஒரு 35 பேரு போனோம்.பஸ்ல குழந்தைக எல்லார்மே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.150-கிலோ மீட்டர். பாம்பேலேந்து. நாலு மணி நேரப்பயணம். நல்லா இருந்தது. நான் மட்டுமே தமிழ்.அங்க ஒரு பெரிய ரெஸ்டாரண்டில் எல்லாரும் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தாங்க.

எதிர்பாராத காதல் . . . ( பகுதி - 1 )

         

          காலேஜ்னாலே நாலு  அஞ்சு கேங் இருக்கத்தான் செய்யும். அது மாதிரி தான் நம்ப ஹீரோ , ஹீரோயின் படிச்சா காலேஜ்ளையும்  ஒரு கேங் இருந்தது. அதுல சில பசங்க சில பொண்ணுங்க. அந்த கேங்ல Commit ஆகாம இருந்தது ஒரு பையனும் ஒரு பொண்ணும்தான் அவங்கதான் நம்ப கதையின் ஹீரோ,  ஹீரோயின் பூஜா மற்றும் சஞ்சய். சும்மா சொல்ல கூடாது நம்ப கேங் போட்ட ஆட்டத்துல காலேஜ் கொஞ்சம் ஆடித்தான் போச்சு . இருந்தாலும் அவங்களுக்கும் தங்களோட கல்லூரி ஆட்டத்தை முடிக்க வேண்டிய நேரம் வந்தது.   அவங்களோட காலேஜ் வாழ்கை முடியபோது. அவங்க எல்லாரும் பரீட்சை முடிச்சிட்டு அவங்களோட விடுமுறைய அவங்க லவ்வர் கூட சந்தோஷமா ஸ்பென்ட் பண்றாங்க. அந்த கேங் அடிகடி வெளில ஒண்ணா சேர்ந்து  போவாங்க. அப்படி ஒரு நாள் எல்லாரும் பார்க்க்கு  போனாங்க.கொஞ்ச நேரத்துல எல்லாரும் அவங்க அவங்க லவ்வர்  கூடதனியா எஸ் ஆகா . சஞ்சய் , பூஜா  மட்டும் தனியா  இருந்தாங்க. அப்போ நம்ப சஞ்சய் , பூஜாகிட்ட பேச ஆரம்பிச்சான் .

சஞ்சய் : ஹாய் 
பூஜா : ஹாய் 
சஞ்சய்: நம்ம கேங்ல எல்லாரும் கமிடெட்நாம ரெண்டு பெற தவிர 
பூஜா : ஆமா 
சஞ்சய்: சிங்கிளா  இருக்குறது ரொம்ப போர்ல?? அதுவும் ஹோலிடேஸ்ல.
பூஜா: ஆமா நானும் அதான் நினைச்சேன். நாம தான் இந்த உலகத்துலேயே நம்ம 
வாழ்க்கைல ஸ்பெஷலா  யாரும் இல்லாம இருக்கோம் 
(பூஜாவுக்கு  அவனை ரொம்ப பிடிக்கும்.. ஆனா சஞ்சய் அவ கிட்ட காதல 
சொல்லனும்னு  அவ ஆச படுறா (என்ன பண்ணுறது எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரிதானே) )
சஞ்சய்: நாம ஏதாவது  பண்ணும்.
பூஜா: ஓ பண்ணலாமே . . .  வேணும்ன்ன பிரியாணி பண்ணலாம? ஹி ஹி

சஞ்சய்: என்ன கிண்டலா ? . ஆனா நான் அடுத்த மாசம் US போறேன் என்னோட higher studiesக்கு ... அதுக்குள்ள நான் ஒரு பொண்ணு பாக்கணும்... அவளை  லவ் பண்ண வைக்கணும் . எப்புடி ?

(சஞ்சய்  ஒரு அனாதை.. அதனால சஞ்சய் வாழ்க்கைல இந்த அளவுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டான்.. அதனால அவனுக்கு லவ் மேல எல்லாம் நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் அவனும் ஒரு சராசரி பையன்தானே . அவனுக்கும் சில சாராசரி  ஆசைகள் இருக்கத்தான் செய்தது. இத்தனை  நாள்தான் அநாதை என்கிற உணர்வோட வாழ்க்கைல முன்னேறவேண்டும் அப்படிங்கிற வெறியோடு எந்தவித சராசரி கொண்டாட்டங்களும் இல்லாம வாழ்க்கை வாழ்த்துட்டான். அதனால    அவனுக்கு இருக்கிற ஒரு மாசம் ஒரு நல்ல நட்பையும் மீறி , அன்யோன்னியமாக பழகவும் , கொண்டாடவும் ஒரு நல்ல பெண் தேவை பட்டா )


பூஜா: சஞ்சய் சும்மா சொல்ல கூடாது என்ன ஒரு வாழ்க்கை லட்சியம் வச்சு இருக்க நீ , சபாஷ் .
 
சஞ்சய் :  ஏய் , நீ வேற , நான் சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னேன் , ஆனா உனக்கே தெரியும் எனக்குன்னு யாரும் இல்லன்னு இத்தனை  நாள் படிப்பு அது இதுன்னு இருந்துட்டேன் ஆனா , இப்போதான் ஏதோ தனிய இருக்குற மாதிரி ஒரு உணர்வு , எனக்கு ஒரு துணை தேவபடுது . பசங்கனா நிறைய பேரு இருக்காங்க , ஆனா ஒரு நல்ல பெண் தோழி , நடப்பையும் மீறி ஒரு உறவு . ஹ்ம்ம் சரி பார்க்கலாம் .

பூஜா: (பூஜா மனதுக்குள்: நான் இந்த வாய்ப்பை தவற விட கூடாது) 
டேய் நான் சும்மா கிண்டல் பண்ணினேண்டா.  சரி நான் வேன்னும்ன்ன ஒரு ஐடியா சொல்லவா ?  (தயக்கத்தோடு கேட்டாள்)
சஞ்சய்: அப்படியா??? என்ன அது???  சொல்லு 
பூஜா: நாம வேனும்னா ஒரு கேம் விளையாடலாமா?.
சஞ்சய்: என்ன சொல்ற நீ?? 
பூஜா: நீ இங்க இந்தியால இருக்கிற இந்த முப்பது நாளைக்கும்  உன் லவ்வரா நான்  இருக்கேன்,  நீ எனக்கு லவ்வரா இரு. அப்புறம் நீ சந்தோசம கிளம்பி US போய் உன்னோட படிப்ப முடிச்சுட்டு வா .
(அவ மனசுகுல்ல : .... இது தான் எனக்கு கிடைச்ச சரியான வாய்ப்பு..நான் என்னொட காதல சஞ்சய்க்கு  புரிய வைக்கணும் .. சஞ்சய் இதுவரைக்கும் பார்க்காத அன்பையும் , பாசத்தையும்  அவனுக்கு 
குடுக்கணும்.. கடவுளே சஞ்சய் இதுக்கு ஒத்துக்கணும்……….. ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)
 
சஞ்சய்: ஹே பூஜா இது ஏதோ கேப்ல கோல் போடுற மாதிரி இருக்கு ? ஹி ஹி ஹி 
பூஜா: அடப்பாவி உனக்கு போய் ஐடியா குடுத்தேன் பாரு , ஏதோ சின்ன பையன் ஆச்சே போனா போகுது கம்பெனி குடுக்கலாம்ன்னு பார்த்த ரொம்பதான் பேசுற? ஆள விடு நீ தனியாவே ஊரை சுத்து , நான் கிளம்புறேன் . 
சஞ்சய்: ஹ ஹ ஹ , . .  ஹே சும்மா சொன்னேன் , நீ வேற கோவிச்சுகாதே.
இதுவ்வும்  நல்ல யோசனையாதான் இருக்கு.. எனக்கும் இந்த ஒரு மாசத்துல  எந்த ப்லானும் இல்ல. 
பூஜா: அப்படிங்கிற ? சரி அப்போ  நாளைல  இருந்து நாம,  நம்ம கேம்மை  ஸ்டார்ட் பண்ணலாம் . சரியா ? (நாலைல இருந்து
நீ உன்மையான அன்பை  பார்க்க  போர.. கடவுளே  இவன் 30 நாளுக்குள்ள சஞ்சய் 
காதலை  என் கிட்ட வந்து சொல்லனும்..)

சஞ்சய்: எனக்கு டபுள் ஓகே .

அப்புறம்  அவங்க அடுத்த 30 நாளைக்கும்  ப்ளான் போட்டாங்க.

நாள் 1:

தொடரும்...............

 
( இந்த கதையை முதல் முறை பதிவிட்ட போது நமது  நண்பர்கள் நிறைய,  நிறை குறைகளை அக்கறையோடு சொன்னாங்க , அதுஎல்லாம் தான் கீழ உள்ள கமெண்ட்ஸ்ல இருக்கு . நிறைவான விசியங்கள நிறைய இருந்தாலும் , குறைகள் அதைவிட கொஞ்சம் தூக்கலாய் இருந்ததால் , அதையெல்லாம் முடிந்த வரை நிவர்த்தி செய்து மீண்டும் பதிவிட்டு இருக்கேன் . இதுலயும் குறைகைகள் இருந்தால் கண்டிப்பாக சுட்டி காட்டுங்கள் . தங்கள் அன்பை அன்போடு எதிர் பார்கிறேன் . . . ) 

அன்புடன்
maggi 


Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters