Followers

மிஸ்டர் எக்ஸ்


Mr. X



இது மிஸ்டர் எக்ஸ் குளுருக்கு வாங்குன டிரஸ் , ஆனா ஆபீஸ் போகும் போது வேட்டி சட்டைலதான் போவாரு, யாரும் சிரிக்க படாது . .  


                 நம்ம மிஸ்டர் எக்ஸ் இருக்காங்களே அவங்க் வேலை பார்த்த ஆபீசு
 13-வது் மாடியில் இருந்தது. அவரு எப்பவுமே நம்ம தமிழ் கலாச்சாரப்படி
வேஷ்டி சட்டை  போட்டுத்தான்  வேலைக்குப் போவார். ஒரு நாளு அ ந்த
 கட்டிடத்தில் எதிர்பாராவிதமாக நெருப்பு பிடித்துவிட்டது. உடனே தீ அணைக்கும்
 ஆபீசுக்கு போன் பண்ணி  நெருப்பணைக்கும் வண்டி எல்லாம் வந்து வேலையை
 சுறு சுறுப்பாக ஆரம்பித்தார்கள்.ஒவ்வொரு மாடியிலும் உள்ள வர்களை காப்பாற்ற
 கிழே அவர்கள் பெரிய  ஸ்பிரிங்க்வலையை  விரித்து ஒவ்வொருவரையாக மெதுவாக
 குதிக்கவைத்து காப்பாற்றினார்கள். எல்லாரும் வெளியேறிய பிறகுதான் குழாய் மூலமாக
 தண்ணீரை முழு வேகத்தில் பீய்ச்சி அடித்து நெருப்பை அணைக்க வேண்டும் என்று
 நினைத்தார்கள். மிஸ்டர் எக்ஸையும் மெதுவாகக்குதியுங்க சார்னு கீழேந்து கத்தினார்கள்.
 அவருக்கோ 13-வது மாடிலேந்து குதிக்க ஒரே பயம். கீழ உள்ளவங்க பயப்படாதீங்க வலை
 இருக்கு இல்லியா ஒன்னும் ஆகாதுன்னு தைரியம் கொடுத்தாங்க. அவரும் எல்லா
  கடவுள்களையும் வேண்டிக்கொண்டு வேகமாக குதித்தார். குதித்தவேகத்திலேயே ஸ்பிரிங்க்
 வலை அவரை திரும்ப மேலே அனுப்பி 10-வது மாடியில் தூக்கி எறியப்பட்டார். ஏதுடா இது
 எல்லாரும் சரியா குதித்து பாதுகாப்பாக கீழ போயிட்டா. எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுதுன்னு
 யோசித்து, கீழே பார்த்து சார் வலையை கெட்டியா பிடிங்க நான் இப்ப குதிக்கரேன் என்றார்.
 திரும்பவும் மிகவும் வேகமாகவே குதித்தார்.

 திரும்பவும் ஸ்பிரிங்க் வலையால் தூக்கி எறியப்பட்டு 11- வது மாடியில் போய் விழுந்தார்.
 கீழே உள்ள தீயணைப்பு படை வீரர்களும் இவரை மெதுவாக குதிக்க ச்சொன்னா கேக்காம
 வேகமா குதிக்கராரேன்னு, கீழே வலையில் பூராவும் பெவிக்காலை தாராளமாக தடவி வைத்து
 இப்ப குதிங்க என்றார்கள்.அவரும் வழக்கம்போலவே வேகமாககுதித்தார். குதித்தவேகத்தில்
 வலையில் தடவி இருந்த பெவிக்கால் உதவியால் அவரின் வேட்டிமட்டும் வலையில்
 ஒட்டிக்கொண்டது. எக்ஸ் திரும்பவும் 13-வது மாடியிலேயே போய் விழுந்தார். எல்லாருக்கும்
 ஒரே சிரிப்பு. எக்ஸோ நான் மாடி படி வழியே இறங்கி வந்துடரேன்னு மூச்சுவாங்க இறங்கி
 வந்தார். கீழே வந்தபிறகுதான் அவருக்கு இடுப்பில் வேட்டியே இல்லை என்பது தெரிய வந்தது.
  வழ்க்கம்போல தன் அசட்டுத்தனத்தால் எல்லாருடைய கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி
பரிதாபமாக     திருதிரு     என்று விழித்துக்கொண்டு நின்றார்.




                      மிஸ்டர் எக்ஸுக்கு ஒருமுறை பல்லில் கூச்சம் ஏற்பட்டது. எந்த
  ஸ்வீட் சாப்பிட்டாலும், ஐஸ்தண்ணி குடித்தாலும் பல்லில் ஒரே
 கூச்சம் இருந்தது. டெண்டிஸ்ட்டிடம் போனார். அங்கு காத்துக்
  கொண்டிருக்கும்போது சுற்றி உள்ளவர்களை வேடிக்கை பார்த்துக்
  கொண்டிருந்தார். ஏ அப்பா இவ்வளவு பேருக்கா பல்லில் அவஸ்தை
 இருக்கு. பல்டாக்டர் ஒரொரு பல்லுக்கும் சார்ஜ் பண்ணிடுவாரே.32 பல்
 ட்ரீட்மெண்டுன்னா என்ன வரும்படி வரும்னுகண்டபடி யோசித்துக்
கொண்டிருக்கும்போதே அவரின் முறைவந்து உள்ளே போனார். டாக்டர்
 இவரிடம் என்ன ப்ராப்ளம் என்று கேட்டார். அப்போதான் எக்ஸுக்கு
 பல்கூச்சத்துக்கு இங்க்லீஷில் என்ன சொல்லுவாங்கன்னு தெரியலியே
 என்றொ தோன்றியது.  சட்டென்று டாக்டரிடம் மை டீத்ஸ் ஆர் ஷையிங்க்.
 என்றார்.  யாராவது கூச்ச சுபாவம் உள்ளவர்களை ஷை டைப் என்றுதானே
 சொல்வாங்கன்னு அப்படி சொன்னார். டாக்டருக்கோ அடக்கமுடியாமல் சிரிப்பு
 வந்தது.

 எப்பல்லாம் உங்க பல்லு ஷை பண்ணுதுன்னு அவரும் ஜோக்காகவே கேட்டார்.
 உடனே மிஸ்டர் எக்ஸுக்கு ஆஹா, நாம கரெக்டாதான் சொல்லி இருக்கோம்
 என்று குஷி ஆச்சு.ஸ்வீட் சாப்பிடும்போது, ஐஸ்வாட்டர்மாதிரி கூலா எதுவும்
 சாப்பிடும்போது ரொம்ப ஷை ஆகுது என்றார். டாக்டரும் தமிழில் கேட்டார்.தமிழ்ல
 சொல்லுங்க பல்லு என்ன பண்ணுது? என்றார். ரொம்ப கூசுது என்றார். ஓ, அதுக்குத்
 தான் ஷையிங்க்னு சொன்னீங்களா. அப்படி சொல்லக்கூடாது டீத்ஸ் ஆர் சென்சிடிவ்
 ஆக இருக்குனு சொல்லணும் என்று டாக்டர் சொல்லவும் பின்ன நீங்க கூட என்கிட்ட
 எப்பல்லாம் பல் ஷை பண்ணுதுன்னு ஏன் கேட்டீங்கன்னு பரிதாபமாக கேட்டார் எக்ஸ்.
 உங்களுக்கு புரிய வைக்கத்தான் அப்படி சொன்னேன் சார். டேக் இட் ஈசி என்றார்.
 எக்ஸும் வழக்கம்போல பரிதாபமாக திரு, திரு முழியுடன் வெளியேறினார்.

அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி


கோவிந்தா, கோவிந்தா.











என் முதல் பெண்ணும் மாப்பிளையும் தறபோது ஒரவருஷமாஹைதரபாத்தில் வசித்தவருகிரார்கள்.அதற்குமுன்பு15வருடங்களாஆப்பிரிக்கநாட்டில் இருந்தார்கள்.வெளி நாட்டு வாழ்க்கை அலுத்து்ப்போய்.இண்டியாவில்வந்து செட்டில் ஆனார்கள். எல்லா சொந்தக்காரங்களும்மும்பையில்தான்
இருந்தார்கள்.மும்பை ரொம்ப நெரிசலா இருக்குன்னு, பாம்பே அவங்களுக்கபிடிக்காம போச்சு. ஹைதராபாத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு ஃப்ளாட்வங்கிண்டுவெளில போய்வர ஒரு காரும் வாஙிண்டு, அங்கியே ஒரு ப்ரைவேட்கம்பெனியில் ஒரு வேலையிலும் சேர்ந்தார். வெளி நாட்டில் சம்பாதித்த பணத்தில் சின்னதாக ஒரு பிளாட்டும் , காரும் வாங்கிண்டு மீதி பணத்தில் கொஞ்சமாகதங்கமும், வெள்ளியுமாக முதலீடு செய்திருந்தார்கள் .



SHORT STORIES


One day a little girl was crossing a bridge along with her father. The father asked his daughter to hold his hand, so that she did not fall into the river. The little girl said: ‘No, dad, you hold my hand’. ‘What is the difference?’ he asked.
‘There is a big difference,’ she said, ‘When I hold your hand and if something happens to me, chances are there for me to let your hands go. But if you hold my hand, I know for sure that no matter what happens, you will never let my hands go’.

Yes! Our parent’s care gives a soothing touch to you. Take hold of it. 


MARRIAGES ARE MADE IN HEAVEN


John was not handsome. He was short and had a hump on his back. He was dark too.
One day he went to his father’s friend’s house. He had a beautiful daughter. She was like a rose. John liked her at the very first sight. But she disliked John’s figure. John had to go out of station on business. He made a chance to see her. But she refused to see him. John asked her, ‘Do you believe that marriages are made in heaven?’ ‘Yes, she said’. John continued, ‘In heaven when a boy child is born God will tell the girl he has to marry. In the same way when I was born, he showed me my future wife. God said, ‘John, your wife will be a hunchback’. I said immediately, ‘No God! Give that hunchback to me and my beauty to her!’
Now Rosy said holding John’s hands: ‘Yes, now I believe all the more that truly marriages are made in heaven.’
"BEAUTY LIES IN THE HEART AND NOT IN SIGHT"



HAVE CARE AND CONCERN




A board was hung on a shop ‘Dogs for sale’.
A boy asked – ‘What is the price?’ From 50 to 100’, said the shopkeeper. The boy put his hand in the pocket took the money and said ‘I have 5 rupees can I see the dogs?
The shopkeeper whistled and called “Lady”.
The dog with 5 pup’s all white in colour jumped and came. The fifth pup came slowly. The shopkeeper said, “A vetenary doctor said that, “this pup’s hip joint is not there, so it will limp throughout the life”. ‘I want only this pup”, said the boy. The shopkeeper said, ‘Don’t buy this dog, buy another. But I will give this pup free’. The boy said ‘You need not give me free, charge for it as you do for the other dogs. This pup is also worth paying’. The shopkeeper again said, ‘Don’t buy this pup, it can’t jump and play with you as other dogs’.
The boy lifted his pant and showed his leg which had a iron brace. ‘Sir! I too cannot run and play. This pup needs a owner who is like me to understand his disability.
Yes friends! Have concern for the weak.
 BE INDIAN




Many of the present day youth are crazy about foreign things. They ignore homemade goods and have pride in owning foreign goods.
A friend of mine was crazy about foreign goods. Every thing in his room was foreign.
One day something fell in his eye. He was complaining of severe pain and taken to an eye specialist. The doctor knew him very well. He examined his eye carefully and said. ‘You have exactly what you like most. A foreign material is in your eye. Should I remove it or you prefer to keep it? My friend was red with shame.

"TRY TO BE AN INDIAN"




with love,  

    Renu . . 




Category: 11 comments

சந்தேகம்.




நம்ம எல்லாருக்குமே காஞ்சி பெரியவர்பற்றி நன்கு தெரியும்(தெரியும்தானே?)
 காஞ்சிபுரத்தில் கலவையில் பெரியவர் முகாம்இட்டிருந்தார்கள்.அப்போதுஒரு
வர் சென்னையில் இருந்து பெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரம் சென்றார்.அவ
ருக்கு பெரியவர் மேல் பெரிய மகான் என்று தனி மறியாதையே உண்டு. அங்கு
சென்று காலை பூஜையில் எல்லாம் கலந்துகொண்டார். அங்கு மடத்திற்கு பெரி
யவாளை சந்திக்க யார் வந்தாலும் மதிய உணவு தந்து உபசரிப்பார்கள். அவரும்
சாப்பாடு ஆனதும், பெரியவரிடம் சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள அங்கு
காத்திருக்கும் 20, 30 பக்தர்களுடன் சேர்ந்துஅமர்ந்துகொண்டார்.சாமிகள்மதியம்
2 டு 4 மணி வரை பக்தர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள்கொடுப்பார். சாமி
கள் உள்ளே தள்ளி ஒரு இருட்டு ரூமில் அமர்வார். மற்றவர்கள் வெளியே ஒரு
 ஹாலில் வரிசையாக அமர்வார்கள்.

 ஒவ்வொருவராக சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றார்கள் .இவர் முறை வந்தது. சாமி நான் கேக்கற கேள்விகொஞ்சம் உங்களை சங்கடப்படுத்தும்.
 தவறாக எண்ணக்கூடாது என்றார். சாமிகளும் என்னப்பா கேட்டுக்கோயேன்
 என்றார். வந்து சாமி, இந்த காய்கறிகள், பழங்கள் ,பூக்கள்,இதுக்கெல்லாம்
 உசிர் உண்டா என்றார். அதிலென்னப்பா சந்தேகம். எல்லாத்துக்குமே உசிர்
 உண்டுப்பா என்றார். அப்போ சாமி, சில பேரு ஆடு, கோழி, மீன் வெட்டி சாப்பி
டராங்க இல்லியா? ஒரு உசிரைக்கொன்னுதின்னா பாவம்னு உங்களைப்போல
 பெரியவங்க சொல்ராங்க.அப்ப காய்,பழம்எல்லாத்துக்குமேஉசிர்இருக்குன்னா
அதுவெட்டி சாப்பிட்டா அதுபாவமில்லையான்னு கேட்டார். சாமிகள் கொஞ்ச
 நேரம் கண்மூடி யோசனையில் ஆழ்ந்தார். என்ன சாமி பதில் சொல்ல முடியலியா? என்றார். சாமிகள் பொறுமையாக, பதில் சொல்லலாம்பா. அதை
உனக்கு புரியும்படி எப்படி சொல்வதுன்னு யோசிச்சேன், என்றார். எதானாலும்
 சொல்லுங்க சாமி. என்றார்.

 சரி இப்ப விஷயத்துக்கு வரலாம், ஆடு கோழி வெட்டி சாப்பிடரவங்க, அந்த
பிராணி களை வெட்டும்போது அதுகளுக்கு வலி வேதனை உண்டாகுமா இல்லியாஅந்தபிராணிகளைதிரும்பவளரவைக்கமுடியுமா.முடியாதுஇல்லியா
 இப்போ காய் பழம் ஒரு மரத்லேந்து எடுக்கரோம். இதுக்கு உனக்கு புரியும்படி சொல்லணும்னா நம்ம உடம்புலயும் உசிர் இருக்கு எல்லா அவயவங்களிலும்
உசிர் இருக்கு. ஆனா மாசா மாசம் நாம முடி வெட்டிக்கரோம், நகம் வெட்டிக்கரோம். நம்ம உடம்புக்கு தேவை இல்லாததால அதை நீக்கரோம்.
முடி நிறையா வளந்தா எவ்வளவு க்‌ஷ்டமா இருக்கு தேவைக்கு அதிகமாகும்
 பொருளை வெட்டி எறிஞ்சுடரோம். நகமாகட்டும் முடி ஆகட்டும். அப்பா முடிக்
க்கோ, நகத்துக்கோ வலியோ வேதனையோ உண்டாகுமா? இல்லைய்தானே?
நம்ம உடம்புலேந்து நீக்கின பிறகு அதுகள் வளருமோ இல்லியே. நம்ம அதை
 நீக்கின பிறகு அதுக்கு எந்த சக்தியுமேஇல்லை.

 அதுபோல காய் பழம் மரத்ல இருக்கும்வரையில் அதுக்கும் உசிர் இருக்கு.
 மரத்துக்கு தேவைக்கு அதிகமாகி நாம பரிச்சப்பரம் அதுக்கு ஏது உசிர். தவிர
 திரும்பவும் அந்தமரத்ல காய் காய்க்கும் ,பூ பூக்கும் ,பழம் பழுக்கும். நாம
 மரத்தை வேரோட வெட்டிச்சாய்க்கலை. மரத்துக்கு தேவைக்கு அதிகமாக
இருப்பதை நாம எடுக்கறோம். நகதுக்கும், முடிக்கும் எப்படி வலி இருக்காதோ,
 அதுபோல காய்களுக்கும் பழத்துக்கும் வலிஇருக்காது.மரத்திலேந்துபரித்ததும்
அதுகளுக்கு உசிரும் இருக்காது. அதனால இது பாவம் கிடையாது என்றார்.
சுற்றி உள்ள பக்தர்கள் சாமியின் விளக்கம் கேட்டு திருப்தியுடன் தலையை
அசைத்து ஏற்றுக்கொண்டனர். ஆனா அந்த பக்தரோ சாமி புரியுது ஆனா
புரியலை. ஒரே குழப்பமாஇருக்கேன்னே  சொல்லிட்டு அங்கேந்து போனார்.


அன்புடன் , 

லக்ஷ்மி  
எனது வலைபூக்கள் :  1 .)  குறைஒன்றுமில்லை 
                                                2 .)  தமிழ்விரும்பி


Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters