Followers

பசுமை நிறைந்த நினைவுகளே.


             
         







நான் சென்னை சென்றிருந்த சமயம் என் அன்பு குழந்தைகள் ரேணு, ஈஸ்வர்
 விஜய் மூணு பேரும் என்னை வந்து சந்தித்தார்கள். நான் தங்கியிருந்த இடத்
 திலிருந்து அவர்கள் எல்லாருமே ரொம்ப தள்ளி இருந்தார்கள். ஆனாலும்
 என்னைப்பார்க்க வந்தார்கள். மிகவும் சந்தோஷமான நெகிழ்ச்சியான சந்திப்
பாக அமைந்தது. நான் தாம்பரத்தில் ஒரு தூரத்து சொந்தக்காரா வீட்டில் தங்கி
 இருந்தேன், அவர்களு ம் இவர்களை அன்புடன் வரவேற்றார்கள்.யூரேஷும்
 வரதா இருந்தான். உடம்பு சரி இல்லாமப்போச்சு.


                                 





ஒருவரை ஒருவர் முதல் முறையாகப்பார்ப்பதால் ஆனந்த்தக்கண்ணீர்தான்
 முதலில் வந்தது. கட்டிப்பிடித்து அன்பான வரவேற்புக் கொடுத்தேன். அப்போ
 நாங்க என்ன பேசினோம் என்ன செய்தோம்னே இப்ப நினைவுக்கு வரலே.
 ஏதோ சொப்பன உலகத்துக்கு போயிட்டு வந்தது போல இருக்கு. ஒன்னரை
 மணி நேரம் தான் இருந்தாங்க.னல்லா பேசி சிரித்து சந்தோஷத்தைக்கொண்டாடினோம். இதுவரை எழுத்துமூலமாகத்தானே
 ஒவ்வொருவரும் பழக்கம். இப்ப நேரில் பார்த்ததும்கூட கனவு போலவே
 இருந்தது.
                   

               










அந்த  வீட்டு மனிதர்களும் இவர்கள்க்கு நல்லா டிபன் காப்பி கொடுத்து, அவங்க
 வீட்டையெல்லாம் சுத்தி காட்டி நல்லா பழகி பேசிக்கொண்டிருந்தாங்க.
 அங்க 80+, 70+, 60+, 50+ 40+ வயதுகளில் பெண்மணிகள் இருந்தாங்க. எல்லாருமே செமை ஜாலியா அரட்டையில் கலந்துகிட்டாங்க.அவங்க வீடு
 பழங்கால வீடு பின்பக்கம் கிணறு, தோட்டம்,5,6, ரூம் கள் கொண்ட விச்தாரமான வீடு பூஜாரூம் வரையிலும் எல்லாரையும் சுத்திக்காட்டினாங்க.
 எல்லாருக்குமே சந்தோஷமான இனிமையான சந்திப்பாக அமைந்தது.இதுக்கெல்லாம் மூலகாரணம் நம்ம ராஜேஷுக்கு தான் நன்றி
 சொல்லனும்.


                                   




 எங்கெல்லாமோ இருப்பவர்களை இந்த சாட் ரும் வழியா பேச, பழக வைக்க வாய்ப்புக்கொடுத்திருப்பது ராஜேஷ்தானே. ராஜேஷ் நீ எங்கே இருக்கேன்னோ, உன்னை எப்படி காண்டாக்ட் பன்னனுனோ தெரியவே இல்லே. நீயும் அமைதி
 யா இருக்கே. யேன்னு தெரியலே. நன்றி, நன்றி.
                                           

                             
Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters